ஐ.பி.எல். தொடரில் மகுடம் சூடப்போவது யார்? சென்னை- கொல்கத்தா மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு டுபாயில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இப்போட்டியில் சென்னை அணிக்கு டோனியும் கொல்கத்தா அணிக்கு ஓய்ன் மோர்கனும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு தொடரில் நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலுமே சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை மூன்று சம்பியன் கிண்ணங்களை வென்றுள்ளது. கொல்கத்தா அணி இரண்டு சம்பியன் கிண்ணங்களை வென்றுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைய போட்டியில் யார் சம்பியன் கிண்ணத்தை வெல்லப் போவது என்று…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *