‘நாளையை நோக்கிய இலங்கை’ என்ற தேசிய நடவடிக்கை ஆரம்பம்

‘நாளையை நோக்கிய இலங்கை’ என்ற தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மரபு ரீதியான சிந்தனைகளைக் கடந்து, எதிர்காலத்தை நோக்கிய புதிய சிந்தனைகளின் ஊடாக அறிவின் துணையோடு முன்னேற்றகரமான பொருளாதார முறையை கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் என கூறப்படுகின்றது.

பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம்  இந்த தேசிய நடவடிக்கையை செயற்படுத்துகின்றது.

மேலும், கல்வித் துறையை தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்காக மிகவும் சாதகமான முறையில் பயன்படுத்துவதற்கு இதனூடாக எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *