கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்து!

கிளிநொச்சியில் டிப்பர் ரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிரவல் ஏற்றி பயணித்த குறித்த டிப்பர் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *