அம்பாறை, சாய்ந்தமருது 03 ஆம் பிரிவில் உள்ள பிரதேசங்களில் புகுந்த யானை அங்கு பயிர்நிலங்கள், பயிர்கள், மரங்கள் என்பவற்றை முற்றாக சேதமாக்கியுள்ளது.
இச் சம்பவம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் யானைகள் ஊடுருவுவதால் மக்கள் பாதிக்கப்படுவதுடன் உடைமைகளும் சேதமாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
மேலும், யானைகள் சாய்ந்தமருதில் சுற்றுமதில்களை அடித்து நொறுக்கியிருப்பதாகவும், அரிசி ஆலையொன்றினுள் புகுந்து அங்கிருந்த நெல் மூட்டைகளையும் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளதாவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், பெரியளவு பொருளாதார நட்டம் ஏற்பட்டுள்ளமையோடு, இரவு வேளையில் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையிட்டு உடனடி தீர்வை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







