நாட்டில் நடைபெற்ற 30 வருடப் போரில் கூட 29 ஆயிரம் பேர் மாத்திரமே உயிரிழந்தனர். ஆனால், கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர்; சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி முதல் இதுவரை 1,760 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்தனர்.
போக்குவரத்து விதிமீறல்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகம் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள்தான் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துகின்றனர்.
அதனை பரிசோதிக்க எந்த உபகரணமும் இல்லை. ஆகவே, அந்த உபகரணங்களை விரைவில் கொண்டு வருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





