21 ஆம் திகதிவரை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதிவரை (வியாழக்கிழமை) கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

இன்று, வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *