சினோபார்ம் தடுப்பூசி போட்டு கனடாவுக்கு பயணம் செய்த பெண் திருப்பி அனுப்பப்பட்டார்!

சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண் லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை கனடா அங்கிகரிக்காததே அதற்குக் காரணமாகும்.

கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனடிய அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களை மாத்திரதே கனடா நுழைய அனுமதித்தும் வருகின்றது.

அந்த வகையில் பைசர், பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற தடுப்பூசிகளை மாத்திரமே கனடா அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *