அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சலுகைகளை ஏற்றுக்கொண்டு, அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக பணிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் சலுகைகள் வழங்கப்பட சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்க வருவாயில் சிக்கல்கள் இருந்தாலும் தாமதமான சம்பளத் தொகையை இரு சமமான கொடுப்பனவுகளில் செலுத்தி திருத்தங்களைச் செய்ய பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டினாலும், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது மற்றும் கல்வி இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவது நியாயமற்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனா தொற்று நோயால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், இலங்கை மக்கள் செலுத்தும் வரிகளால் அரச துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





