சிறுவர் தினத்தை முன்னிட்டு போரில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் ஒழுங்குபடுத்தலில் குருதிக்கொடை முகாம் இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இந்த இரத்ததான முகாம் 8 ஆவது வருடமாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி எஸ். கருணதீபா, வைத்தியர்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர் நவீன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.







