வவுனியாவில் பட்டப்பகலில் பணம் நகை திருட்டு!

வவுனியா, மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் நேற்று பகல் வேளையில் வீடு உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் வசித்து வந்த கட்டட ஒப்பந்ததார் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை 8 மணியளவில் செட்டிகுளம் பகுதியில் மரணவீடு ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

பின்னர், மாலை 6 மணியளவில் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் முற்றத்தில் அலுமாரியின் பெட்டகத்தின் சில பகுதிகள் சிதறிக் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டிற்குள் உட்சென்று பார்த்தபோது, பின்கதவு உடைக்கப்பட்டு உட்புகுந்த திருடர்கள் அனுமாரியில் வைக்கப்பட்ட நான்கு பவுன் நகைகள் மற்றும் எழுபதினாயிரம் ரூபா பணம் என்பனவும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது .

இதுதொடர்பில், நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *