திருக்கேதீஸ்வர ஆலயத்தில் வடக்கு ஆளுநர் வழிபாடு!

வடக்கு மாகாண ஆளுநர் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த வாரம் வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையை ஆரம்பித்துள்ள ஆளுநர் இன்று மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும், ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டு, திருக்கேதீஸ்வர பாலாவி தீர்த்தக்கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்க பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *