வெளிவிவகார அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (25) எளிமையான வைபவத்தில் அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, உள்நாட்டு நிர்ப்பந்தங்களையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சின் ஆணையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்காக பதவி விலகும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை அவர் பாராட்டினார்.

அமைச்சர் சப்ரி 2020 இல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அமைச்சர் அலி சப்ரி 12 ஆகஸ்ட் 2020 முதல், 4 ஏப்ரல் 2022 அன்று நிதி அமைச்சராக நியமிக்கப்படும் வரை நீதி அமைச்சராக பணியாற்றினார்.

நீதி அமைச்சர் என்ற வகையில், இலங்கை நீதித்துறையில் பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களை திருத்துவதற்கான நீதித்துறை சீர்திருத்த வேலைத்திட்டம் உட்பட பல புதிய முயற்சிகளை அவர் தொடங்கினார்.

அமைச்சர் அலி சப்ரி, நீதித்துறையின் டிஜிட்டல் மயமாக்கல், நாடு முழுவதும் நீதிமன்றங்களை விரிவுபடுத்துதல் மற்றும் காலதாமத பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

நிதியமைச்சர் என்ற வகையில், வாஷிங்டன் டி.சி.யில் நடந்த சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) மற்றும் உலக வங்கி உடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கு அவர் இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார்.

அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், அமைச்சர் அலி சப்ரி சட்ட அறிக்கைகள் மற்றும் வெளியீடுகளில் தோன்றிய பல வழக்குகளில் ஒரு வழக்கறிஞராக இருந்தார்.

அவர் 2012 இல் ஜனாதிபதியின் சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார் மற்றும் 2009 இல் சட்டத்தில் சாதனை படைத்ததற்காக ஆண்டின் சிறந்த இளம் நபருக்கான விருதைப் பெற்றார். அவர் 1997 இல் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இலங்கையின் தூதரகத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *