திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடாக்கரை பகுதியில் சுமார் ஐந்து மாதங்களின் பின் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.
சமையல் எரிவாயுவானது நேற்று (26) சீனக்குடா ,குடாக்கரை மைதானத்தில் வைத்து வழங்கப்பட்டன.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் 5 மாதங்களின் பின்பே குறித்த பகுதிக்கு எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.
மே மாத மின்சார பட்டியலை மையமாக வைத்து எரிவாயு விநியோகிக்கப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் இருந்து இதனை பெற்றுச் சென்றனர்.


பிறசெய்திகள்