கொழும்பு, ஜூலை 31:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காலி மாவட்டத்தில் அமைந்துள்ள தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று மாலை விஜயம் செய்து அங்கு கடற்றொழில் பிரதிநிதிகளுடனும், துறைமுக அதிகாரிகளுடனும் அங்குள்ள பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன்போது பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
