எரி­பொ­ருள் நிரப்­பு­வ­தற்கு இனி­மேல் கட்­டுப்­பாடு! –யாழ். மாவட்­டச் செய­ல­கம்

முதன்­மு­றை­யாக எரி­பொ­ருள் நிரப்பு நிலைய உரி­மை­யா­ளர்­க­ளை­யும் அழைத்து யாழ். மாவட்­டச் செய­ல­கம் நேற்று நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில் பல்­வேறு முக்­கி­ய­மான தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

யாழ். மாவட்­டச் செய­லர் க.மகே­சன் தலை­மை­யில் நேற்று பி.ப. முக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. இதில் பிர­தேச செய­லர்­கள், இ.போ.ச. வட­பி­ராந்­திய முகா­மை­யா­ளர், இலங்கை பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத்­தின் வட­பி­ராந்­திய முகா­மை­யா­ளர், எரி­பொ­ருள் நிரப்பு நிலைய உரி­மை­யா­ளர்­கள், பொலி­ஸார் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

நேற்று தொடக்­கம் ’கியூ­ஆர்’ அடிப்­ப­டை­யில் மாத்­தி­ரம் எரி­பொ­ருள் விநி­யோக நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இதனை ஒரு வாரத்­துக்கு அவ­தா­னித்து அதன் பின்­னர் கிராம அலு­வ­லர் பிரிவு ரீதி­யான எரி­பொ­ருள் விநி­யோ­கத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை ஆரா­ய­லாம் என்று முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

பெரும்­பா­லான எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளில் பொலி­ஸார் தமது தனிப்­பட்ட வாக­னங்­க­ளுக்கு எரி­பொ­ருள் நிரப்­பு­வ­தா­கக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

அது தொடர்­பில் பிர­தேச செய­லர்­க­ளால், எந்­தெந்த பொலிஸ் நிலை­யத்­தி­னர் அவ்­வாறு நடந்து கொள்­கின்­ற­னர் என்ற விவ­ர­மும், பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரி­டம் முன்­வைக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து பொலி­ஸா­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வாக­னங்­க­ளுக்கு மாத்­தி­ரம் எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளில் எரி­பொ­ருள் நிரப்­பு­வ­தற்கு அனு­ம­திப்­பது என்­றும், அலு­வ­ல­கத் தேவைக்கு தமது தனிப்­பட்ட வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் பொலி­ஸா­ரின் விவ­ரங்­களை பிர­தேச செய­ல­கத்­துக்கு சமர்ப்­பித்து, பிர­தேச செய­லர் அனு­ம­தித்­தா­லேயே அதற்கு எரி­பொ­ருள் நிரப்­ப­லாம் என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்­டுக்­குச் பய­ண­மா­வ­தற்கு கொழும்­புக்கு செல்­லும் வாக­னங்­க­ளுக்கு பிர­தேச செய­ல­ரின் பரிந்­து­ரை­யு­டன் இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் சாலை­க­ளில் எரி­பொ­ருள் நிரப்ப முடி­யும்.

அந்த வாக­னத்­துக்கு ’கியூ­ஆர்’ நடை­மு­றைக்கு அமை­வாக 40 லீற்­றர் டீசல் பெற முடி­யும் என்­ப­தால், போக்­கு­வ­ரத்­துச் சபை எஞ்­சிய 60 லீற்­றர் டீச­லையே விநி­யோ­கிக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­போன்று மரக்­க­றி­களை கொண்டு செல்­லும் வாக­னங்­க­ளுக்­கும் இவ்­வாறு டீசல் விநி­யோ­கிக்க இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபை இணங்­கி­யுள்­ளது.

பாட­சாலை சேவை­க­ளில் ஈடு­ப­டும் வாக­னங்­கள், தனி­யார் பேருந்­து­கள், தேசிய நீர் வழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபை­யின் வாக­னங்­கள், இலங்கை மின்­சார சபை­யின் வாக­னங்­கள், ரெலிக்­கொம் வாக­னங்­க­ளுக்கு எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளில் எரி­பொ­ருளை விநி­யோ­கிக்க வேண்­டாம் என்­றும் அவர்­க­ளுக்கு இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் சாலை­யில் வழங்­கப்­ப­டும் என்­றும் நேற்­றுத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­களை மாலை 5 மணி­யு­டன் மூடு­வது தொடர்­பில் ஆலோ­சிக்­கப்­பட்­ட­போ­தும் அதி­லுள்ள சில சிக்­கல்­கள் கார­ண­மாக அந்த முடிவை எரி­பொ­ருள் நிரப்பு நிலைய உரி­மை­யா­ளர்­கள் தமது பகு­திக்­கு­ரிய பிர­தேச செய­லர்­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்து மேற்­கொள்ள முடி­யும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

எரி­பொ­ருள் நிரப்பு நிலைய உரி­மை­யா­ளர்­கள் எவ்­வ­ளவு வாக­னங்­க­ளுக்கு எரி­பொ­ருள் விநி­யோ­கம் நடை­பெ­றும் என்­பதை முற்­கூட்­டியே அறி­வித்து, அதற்கு மேல­தி­க­மாக வாக­னங்­களை அனு­ம­திக்­கா­மல் இருக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் வாக­னங்­களை வரி­சை­யில் விட்­டு­விட்டு, எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­தைச் சூழ அதி­க­ள­வா­னோர் நிற்­பதை அனு­ம­திக்க வேண்­டாம் என்­றும் அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை பொலி­ஸார் மேற்­கொள்­ள­வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று எரி­பொ­ருள் நிரப்பு நிலைய வளா­கத்­தில், எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­தில் பணி­யாற்­று­ப­வர்­க­ளின் வாக­னங்­கள் தவிர்ந்த ஏனைய வாக­னங்­களை நிறுத்த அனு­ம­திக்­கக் கூடாது என்­றும் நேற்­றைய கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *