வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனமும் ஹெல்திலங்கா நிறுவனமும் இணைந்து நடாத்தும் கிராமத்தில் உள்ள வேலைத்திட்ட குழுவினருக்கான மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கானது இன்றையதினம் சங்கானையில் உள்ள வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தில் நடைபெற்றது.
இதன்போது வீட்டு பொருளாதாரத்தை மகிழ்ச்சியான குடும்ப சூழலுடன் எவ்வாறு கட்டியெழுப்புவது தொடர்பான பயிற்சிநெறியும் வழங்கப்பட்டது.
இந்த பயிற்சிநெறியின் வளவாளராக ஹெல்திலங்கா நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த கருத்தமர்வில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தொடர் செயற்பாடாக வீட்டுத்தோட்டத்துக்கான ஊக்குவிப்பாக பயன்தரு விதைகளும் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது.
வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செ.குமாரசிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கேசவதாசன், வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் வலிகாமம் மேற்கு பிரிவில் உள்ள இளைஞர் யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


பிற செய்திகள்
- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிவழங்கக் கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று!
- சம்பந்தன் இதுவரை தமிழ் மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை- வீ.ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!
- புதிய பாதையில் பயணிக்கவுள்ள பொதுஜன பெரமுன!
- சர்ச்சைக்குரிய சீன கப்பல், ஹம்பாந்தோட்டைக்கு இன்று வராது!
- கோட்டா எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும்- முக்கிய அமைப்பு உறுதி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka