யாழில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

இன்று காலை 06.30 மணியளவில் (12.12.2022) யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி, ஜே/432 கிராம சேவையாளர் பிரிவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பகுதியில் தடாகம் ஒன்றிற்கு அருகில் வெடிபொருட்கள் இருப்பதை மீனவர் ஒருவர் அவதானித்த நிலையில் வெற்றிலைக்கேணி இராணுவ அதிகாரிகளுக்குத் ஈதனை தெரியப்படுத்தினார்.
அங்கு 60 MM ரக மோட்டார் குண்டுகள் 10 கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றினை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *