திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த அரசாங்க தகவல் திணைக்கள அடையாள அட்டை கொண்ட தமக்கென காணி அற்ற ஊடகவியலாளர்களுக்கு வீடமைக்க காணித்துண்டு வழங்கும் நடவடிக்கையை மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டு வருகின்றார்.
அதன்படி, விண்ணப்படிவத்தை மாவட்ட செயலகத்தில் பெற்று 2022.01.15 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியுமென திருகோணமலை மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.