
நாட்டில் ஒமிக்ரோன் அலை ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அறிகுறிகள் நாட்டில் தென்படுவதாக நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புணர்ச்சியின்றி கோவிட்டை மறந்து செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மிகவும் வேகமாக பரவும் ஒமிக்ரோன் தொற்று இலங்கையிலும் ஓர் அலையாக உருவாக கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆபத்தினை தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
