கொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட இலங்கை குடும்ப வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன,
இவ்வாறான அலைக்கு முகம் கொடுப்பதற்கும் அதனைத் தவிர்ப்பதற்கும் மக்கள் தங்களைத் தாங்களே முன்னிறுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகின் போக்குகளைப் பொறுத்த வரையில், ஒமிக்ரான் பல நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். எனவே, அந்த அச்சுறுத்தல் இலங்கைக்கு விதிவிலக்கானது அல்ல.
தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற தகுதியுடையவர்கள் அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சுகாதார விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒமிக்ரோன் மாறுபாட்டின் ஏழு நோயாளிகள் இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.