அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக நிகழ்வுகளை உருவாக்குவதாக ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி நேற்றுமுன்தினம் முதல் மத்திய மாகாண மக்களுடனான கருத்து கோரலை ஆரம்பித்துள்ளது. அதன்படி, மூன்றாவது நாளாக இன்றும் கருத்துக் கோரல் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்! ஆளுங்கட்சி எம்.பி. ஆருடம்