காலி – வதுரும்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி மற்றும் தோட்டக்களை வைத்திருந்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தலாவ, வதுரும்ப பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது துப்பாக்கியொன்றும் ஏழு தோட்டாக்கள், 4 லீற்றர் மதுபானம், 168 லீற்றர் கோடா என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக நிகழ்வுகளை உருவாக்குகின்றனர்! ஞானசார