
பெருமளவான மக்கள் கண்ணீர் சிந்த நவீனனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சக பொலிஸ் உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாண்டிருப்பைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அழகரெட்ணம் நவீனனின் இறுதி அஞ்சலி நிகழ்வு பாண்டிருப்பு இந்து மயானத்தில் பொலிஸ் மரியாதையுடன் இன்று இடம்பெற்றது.
இறுதி அஞ்சலி நிகழ்வின் போது பொலிஸ்மா அதிபரின் இரங்கல் செய்தி பொலிஸாரால் வாசிக்கப்பட்டதுடன், உயிரிழந்த நவீனனுக்கு பொலிஸ் சாஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்ட செய்தியும் பொலிஸ் அதிகாரியால் வாசிக்கப்பட்டதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் நவீனனின் பதக்கங்கள் தொப்பி என்பன தந்தையிடன் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த துப்பாகி பிரயோகத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்திருத்தனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சக பொலிஸ் உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கிழக்கு மாகாண பொலிஸ் அத்தியட்சகர் பாண்டிருப்பில் உள்ள நவீனனின் வீட்டுக்கு வந்து சென்றதுடன் அரசியல் பிரமுகர்கள் பலரும் வருகை தந்தும் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தனர்.
சிறந்த சமூகபற்றாளனாக காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நவீனனின் இழப்பால் பாண்டிருப்பு கிராமமே சோகமயமாக உள்ளது.