முஸ்லீம் மக்களுக்கான நீதி மன்றத்தை ஒழிக்க நடவடிக்கை?

காதி நீதிமன்றத்தை ஒழிக்க பரிந்துரை செய்யுமாறு முன்னாள் உயர் நீதிமன்ற பதிவாளர் மொஹமட் ஜுபைர், ஜனாதிபதி செயலணிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், பலதார மணம் சட்டம் மற்றும் மதப் பிரிவுகளைப் பயன்படுத்தி பல்வேறு அமைப்புகளை நிறுவுவதைத் தடை செய்ய வேண்டும்.

பெரும்பாலான வழக்கள், வழக்கறிஞரல்லாத காதியால் நடத்தப்படுகிறது. சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வமற்ற ஆவணங்களை கதியால் துல்லியமாக அடையாளம் காண முடியாத நேரங்கள் உள்ளன.

எனவே, உரிய கவனத்துடனும் நடுநிலைமையுடனும் சரியான தீர்ப்பு வழங்கப்படாத பல நிகழ்வுகளும், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படாத நிகழ்வுகளும் உள்ளன.

இந்த நிலையில் காதி நீந்திமன்றங்களின் அவசியம் குறைகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *