முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் ஏற்பாட்டில், தளிர்கள் மரநடுகை மையத்தினால் சுனாமியில் உயிரிழந்த உறுவினர்கள் நினைவாக வடமராட்சி கிழக்கில் 1,500 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
உடுத்துறையில் நடைபெற்ற கலை ஊக்கிகள் நிறுவனத்தின் 26இல் செங்கடலே இறுவெட்டு நிகழ்விலும் ஏனையவை சுனாமி நிகழ்விலும் வடமராட்சி கிழக்கில் வழங்கிவைக்கப்பட்டது.
எம் உறவுகள் நினைவினை சுமந்து அடுத்த தலைமுறைக்கு மரங்களின் அவசியம் தொடர்பான சிந்தனையினையும், இயன்றவரை சுயபொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற கருப்பொருளினையும் மையமாக வைத்து இச்செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

