புத்தளத்தில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரதரதில் கல்வி கற்கவுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாலாவியிலுள்ள Wodept நிறுவன வளாகத்தில் இன்று (27) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சர்வமத குழுவின் இணைப்பாளர் உவைஸ் முஸ்னியாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வமத குழுவின் இணைத் தலைவர் சர்மா குருக்கள், பொருளாளர் ஏ.சி.எம்.ருமைஸ், உறுப்பினர் முஹம்மது முஸம்மில், பெருக்குவற்றான் மு.ம.வி அதிபர் ஏ.சி. நஜிமுதீன், வேப்பமடு மு.ம.வி அதிபர் முஹம்மது மனாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தளம் மாவட்ட சர்வமத குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க, தேசிய சமாதான பேரவையின் நிதியொதுக்கீட்டில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.