பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி!

கொரோனா அச்சுறுத்தல்களால் பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அகற்றி அவற்றினை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில், திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *