கோட்டாபய வரலாற்றில் இடம்பெறுவார்! ஜோன்ஸ்டன் புகழாரம்

ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுவார் என்றும், கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஒருவர் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளை – செங்கலடி வீதியின் பிபில முதல் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு ஆரோக்கியமான அபிவிருத்தியை உறுதி செய்வதே ஜனாதிபதியின் முயற்சியாகும்.

கொரோனாத் தொற்றுநோய் ஏற்பட்ட போது, அனைத்து நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டது.

உலகத் தலைவர்கள் பொது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் சவாலை எதிர்கொண்டனர்.

ஜனாதிபதியின் விடாமுயற்சியினால் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கவில்லை. திட்டத்தை நாசப்படுத்தவே முயன்றது.

குறுகிய காலத்தில் இலங்கை மிகவும் அபிவிருத்தி நாடாக அறியப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் உலகம் சுற்றும் இளம் யுவதி இலங்கையில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *