புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கமைய தொடருந்து நிலைய அதிபர்கள் நாளை முதல், பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.