போதையில் இருந்த இரு பொலிஸார் பணி இடைநீக்கம்!

கடமையின் போது போதையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே, இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், நேற்று நண்பகல், கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் குறித்த இருவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த இருவரிடமும், சாவகச்சேரி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், குற்றம் உறுதியான நிலையில், குறித்த இருவரும் மறு அறிவித்தல் வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் குவியும் வெளிநாட்டு மாப்பிள்ளைமார்: திருமணம் செய்வதில் சிக்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *