அகில இலங்கை ரீதியாக 13 ஆயிரம் தாதிமார் உத்தியோகத்தர்கள் தமது பதவி உயர்வினை இழக்கின்ற நிலை தற்போது எற்படுகின்றது. அதற்காககே எமது சங்கப்பிரதிநிதிகளுடான அகில இலங்கை ரீதியாக போராட்டம் இடம்பெறுகின்றன என அரச தாதியோர் உத்தியோகச் சங்கத்தலைவர் சமன் இரத்தினபுரி தெரிவித்தார்.
வடமாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனம் மற்றும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் மற்றும் இலங்கை தாதியோர் சங்கத்தின் கம்பனி யூனியன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த எற்பாட்டில், சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ரணக்கே என்ற அரசதிட்டத்தினை அமுலாக்கப்படவேண்டும் என வலியூருத்தி 19 அம்ச கோரிக்கையினை உள்ளாடக்கிய கண்டகவனயீர்ப்பு போராட்ட பேரணி இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பேரணி அங்கியிருந்து யாழ். வைத்தியசாலை வீதி, பலாலி வீதி மற்றும் ஆரியகுளம் வீதியுடாக சென்று பழைய மணிக்குகூட்டு வீதிவரைசென்று பின்பு யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் நிறைவுபெற்றது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் அரசதாதியோர் உத்தியோகச் சங்கத்தலைவர் சமன் இரத்தினபுரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கோரிக்கையினை நிறைவேற்றவேண்டும் என்று சுகாதார அமைச்சருக்கு நாம் தெளிவாக கூறுகின்றோம்.
இந்த போராட்டங்கள் நடாத்தப்பெற்றாலும் கூட எந்தொரு நடவடிக்கையினையும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல, சுகாதார அமைச்சரின் செயலாளர் எமது போராட்டத்தின் கோரிக்கைக்கு செவி சாய்காமல் உள்ளனர்.
சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ரணக்கே சம்பள ஆணைக்குழுவில் 2010ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும், மேலதிக நேரக்கொடுப்பனவினை அதிகரிக்கவேண்டும், விசேட கொடுப்பனவினை அதிகரிக்கவேண்டும், பதவிநிலை சுற்றுநிருபம் பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டபோதிலும் அதன் காரணமாக சுகாதார அமைச்சு அதற்காக சுற்று நிருபத்தினை வெளியிடவில்லை, சுகாதார அமைச்சர் இராணுவத்திற்கு அல்ல அவர் பொதுமக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.
இதனால் எமது கோரிக்கைகளுக்கான நிவராணங்களை பெற்றுத்தரும் வரை எமது போராட்டம் அரசு எதிராக முன்னெடுக்கப்படும். எனவும் இதன்போது அரசதாதியோர் உத்தியோகச் சங்கத்தலைவர் சமன் இரத்தினபுரி தெரிவித்தார்.
இதன்போது, 300ற்கும் மேற்பட்ட தாதிமார்கள், தொழிற்சங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பணிநிலை உத்தியோகத்தார்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கையினை உள்ளடக்கிய பதாதைகளை எந்தி கலந்து கொண்டனர்.
இலங்கை தாதியோர் சங்கத்தின் கம்பனி யூனியனின் தலைவர் அஜித் திலகரட்ண, அரச தாதியோர் தொழில் வல்லுனரின் ஒன்றியத்தலைவர் எ.ரவிகுமுதுகே, அகில இலங்கை தாதியோர் சங்கத்தின் நிறைவேற்று இயக்குநர் உதய திஸ்ஸ நாயக்க மற்றும் வடமாகாண தாதியோர் சங்கத்தின் செயலாளர் என் கிரிதரன் உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.




