நயினாதீவில் இன்று திடீரென வீசிய சுழல் காற்றினால் வீடுகள் சேதமடைந்துள்ளன.
வடக்கில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற காரணத்தினால், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவில் இன்று மாலை திடீரென சுழல் காற்று மழை கடுமையாக வீசியுள்ளது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதோடு ஓடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது.