எரிவாயு தட்டுப்பாடு நீங்க மூன்று வாரங்களாகும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுவிற்கு நிலவும் தட்டுப்பாடு நீங்குவதற்கு மேலும் மூன்று வாரங்கள் செல்லும் என லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தையில் காணப்படும் சிலிண்டர்களை மீள பெற்றுக்கொள்ளல் மற்றும் புதிய தரப்படுத்தல் செயற்பாடுகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக, புத்தாண்டு நாளாகிய நெற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *