தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் உள்ளிட்ட சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இராமநாதபுரம், மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சுறா இறகு, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக நேற்று பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் பொலிஸார் மற்றும் மண்டபம் வனத்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, வேதாளை தெற்கு தெருவில் சதாம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த 34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள், 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக சதாம் என்பவரைகாவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்ம படகு மூலம் இலங்கைக்கு நேற்று இரவு கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திடம் பதவிக்காக காத்திருக்கமாட்டேன்! பீ.பி.ஜயசுந்தர






