வவுனியா ஐயனார் விளையாட்டு கழகத்தின் பரடைஸ் நைட் கௌரவிப்பு நிகழ்வு இன்றையதினம் (02) வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஐயனார் விளையாட்டு கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களிற்கான நினைவு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 2020ம் மற்றும் 2021ம் ஆண்டுகளில் கடினபந்து போட்டிகளில் விளையாடி தமது திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களிற்கான பதக்கங்களும், நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் ஈழத்து கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவாகிய புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்பட குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத், கழகம் கடந்து வந்த பாதை மற்றும் எதிர்கால செயற்பாடு தொடர்பாக உரையினை கழக முகாமையாளர் வ. வித்தியாதரனாலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.