சவப்பெட்டிக்குள் நாட்டை தள்ளிய அரசு இறுதி ஆணியை அடிப்பதற்கு தயாராகிறது! சஜித் கடும் காட்டம்

நாட்டை சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ள அரசாங்கம் கடைசி ஆணியை அடிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மறுபுறம் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டையும் மக்களையும் மயானத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான பாதைகளைத் துரிதமாகத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எதில் வெற்றியடைந்திருக்கின்றது? அடுப்பு எரிப்பதற்குப் பயன்படுத்துகின்ற விறகு இப்போது பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது எனவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *