மஹிந்த இராஜினாமா குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவலை பிரதமர் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவார் என்றும், புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகின.

எனினும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வில் C சித்தி A சித்தியாக மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *