புத்தளம் – ஆனமடுவ பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்!

புத்தளம் – ஆனமடுவ பிரதேச சபையின் புதிய செயலாளராக, புத்தளம் நகர சபையின் நிர்வாக உத்தியோகத்தரான சுஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள செயலாளர் வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை புதிய செயலாளர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

புத்தளம் நகர சபையில் செயலாளர் வெற்றிடம் காணப்பட்ட போது ஆறு மாதங்களுக்கு மேல், தற்காலிக செயலாளராக கடமையாற்றி வந்த சுஜித் ஜயசுந்தர, நகர சபைக்கு நிரந்த செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று வரை நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.

இவ்வாறு நாளை புதிய செயலாளராக கடமைப் பொறுப்பேற்கவுள்ள சுஜித் ஜயசுந்தரவுக்கு புத்தளம் நகர சபை ஊழியர்களால் இன்று பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது.

புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செயலாளர் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

குளிரூட்டிக்கான வாயு வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *