
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து பிரதான நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
பாரிய நீர் தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைவாக, இராஜங்கனை நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இராஜங்களை நீர்தேக்கத்தின் வான் கதவுகளில் இருந்து 2,400 கன அடி நீர் கலா ஓயாவுக்கு பாய்ச்சப்படுகின்றது.
அதேவேளை, அங்கமுவ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியதனால் அதன் 2 வான் கதவுகள் 2 அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளன.
இதன் நீர் லுணு ஓயாவை சென்றடைகின்றது. இந்த பிரதேசத்தில் கனமழை பெய்வதனால் இவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? கோட்டா கடும் சீற்றத்துடன் கேள்வி