சுசில் பிரேமஜயந்தவின் அமைச்சுப் பதவி பறிப்பு!

தெற்கு அரசியலில் முக்கிய பல பதவிகளை வகித்த மூத்த அரசியல்வாதியான சுசில் பிரேமஜயந்த, அவர் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள தத்துவங்களின் அடிப்படையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச , அமைச்சரின் பதவியைப் பறித்து உத்தரவிட்டார்.

கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சுப் பதவியை வகித்த சுசில் பிரேமஜயந்த, அண்மைக்காலமாக அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துவருகின்றார்.
“அந்நிய ஆக்கிரமிப்பின்போதுகூட, எமது நாட்டு விவசாயம் இந்தளவுக்குப் பாதிக்கவில்லை. ஆனால், தற்போது தவறான முடிவுகள் எடுக்கப்பட்டமையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எம்மைப் போன்றவர்கள் முடிவெடுக்கும் இடத்திலில்லை, ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளோம்.

விவசாயத்துறை அமைச்சர் ‘பெயில்’. உரியவகையில் செயற்படக்கூடிய = தகுதியானவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.” = என கடந்த முதலாம் திகதிகூட அவர் விமர்சித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட சுசில் பிரேமஜயந்த மஹிந்த ஆட்சியின்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை வகித்தவர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராகவும் செயற்பட்டவர்.
2015 ஆட்சிமாற்றத்தின் பின்னர் மைத்திரி அணியில் சேர்ந்தார். அதன்பின்னர் மஹிந்த பக்கம் சென்றார். எனினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆட்சியில் அவருக்கு உரிய இடம் வழங்கப்பவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *