
எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
பாடசாலைகளுக்கு தற்போது பகுதி பகுதியாகவே மாணவர்கள் அழைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையிலான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் வழமைக்கு திரும்புமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, புதிய தீர்மானத்திற்கு அமைய அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்று என் ஆட்சியை வீணடித்த ரணில் ஒரு துரோகி – மைத்திரி சீற்றம்