தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்கள் அழிப்பு – ஜனாதிபதிக்கு தெரிவித்த முஸ்லீம் எம்.பி

ஜனாபதியின் ஆலோசனையின் கீழ்,ஞானசாரதேரர் தலைமையில் நிறுவப்பட்ட ஒரே நாடு ஒரு சட்டம் என்ற செயலணி அனைவருக்கும் நன்மைபயக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஷ்ரப் தெரிவித்துள்ளார்.

செயலணியின் பொது சந்திப்பு , பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பின்னர்,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த செயலணி நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என நம்புகின்றோம்.அதற்கான சில ஆலோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம்.

சட்டங்கள் இயற்றப்படும் போது அது ஒரு இனத்தையோ ,மதத்தையோ இலக்கு வைத்து அமுல் படுத்தப்படுவதாக அமையக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

குறிப்பாக தமிழ் மக்களின் தொல்லியல் அடையாளங்கள் சிதைக்கப்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

அதிலும் முக்கிய திணைக்களங்களில் தமிழ் முஸ்லீம்கள் பதவி வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *