
கோட்டா அரசின் முட்டாள் தனமான ஆட்சியால் பல நாடுகள் விலகி நிற்கிறது,ஆகவே மீண்டும் மீண்டும் 13 ஆவது திருத்த கதைகளை கூறும் ஆட்சிக்கு எதிராக மக்கள் எதிப்பினை காட்ட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின், 22 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இனியும் நாம் ஆட்சாய் மாற்றம் ஒன்றை எதிர் பார்த்து நிற்கப்போகின்றோமா அல்லது எழுந்து நின்று எதிர்ப்பு குரலை காட்டப் போகின்றோமா என்று சிந்திக்க வேண்டும்.
எங்களுக்கு என்று ஒரு பிரச்சினை வரும் போது இந்திய உட்பட எந்த சக்தியும் எம்மோடு நிற்கவில்லை.கொழும்பு அரசியலில் இப்போது குழப்பம் ஆரம்பித்துள்ளது.
ஆட்சி மாற்றம் வந்தால் கூட தமிழ் மக்களை தேடி பலர் வருவார்கள்.13ஆவது திருத்தம் என்ற தொடக்கப் புள்ளி அனைவருக்கும் சுருக்கு கயிறாக மாறப்போகிறது.
அன்று எமது கோரிக்கைகளை ஏற்று இருந்தால்,சீனா இன்று இங்கே கால் பதிருத்திக்க முடியாது.
இந்தியாவும் எம்மை கேட்க முடியாது.மீண்டும் மீண்டும் பேரம் பேசும் சக்தி எம்மிடம் வந்து செல்கிறது.
அதை நாம் பயன்படுத்தவில்லை.ஆயுத போராட்டம் போன்ற பலமான சக்தி எம்மிடம் உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.