
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவரெட்ணபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை (05) பகல் வேளையில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது.
எனினும், இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
வீட்டில் பகல் உணவை தயார்படுத்திக் கொண்டிருந்தபோது இவ் அடுப்பு சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த இவ் சமையல் எரிவாயினை வீட்டு உரிமையாளர்கள் ஒரு வாரமாகவே பாவித்து வரும் நிலையில் இவ்வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

