
மத்திய மலையக பிரதேசத்தில் சகல நகரங்களிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள எரிவாயு பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு நிறுவனம் தங்களுக்கு சாதகமாக விலை அதிகரிப்பு செய்த போதும் பாவனையாளர்களுக்கு முறையான வகையில் சேவை செய்யவில்லை.
அத்துடன், மத்திய மலை நாட்டில் கடந்த சில வாரங்களாக பல இடங்களில் எரிவாயு அடுப்பு வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.
அவ்வாறு இருந்த போதும் மக்கள் எரிவாயு தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது விடயமாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முன்வந்து தற்போதைய காலகட்டத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
