
நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தினால் தற்போதுள்ள கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதே எங்களது முதல் நோக்கமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டுமன்றி ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.