சுற்றுலாப் பயணிகள் ஊடாக ஒமிக்ரோன் பரவுவதனை தடுக்க நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளின் ஊடாக நாட்டுக்குள் ஒமிக்ரோன் திரிபு பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமிக்ரோன் திரிபு, சுற்றுலாப் பயணிகள் ஊடாக பரவுவதனை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் எந்தவொரு பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போதே அவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனரா? அவர்களின் ஏனைய விபரங்கள், நாட்டுக்குள் எந்த இடங்களுக்கு செல்கின்றார்கள் போன்ற சகல விபரங்களும் திரட்டிக் கொள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் குறித்த சுகாதார வழிகாட்டல்களில் எவ்வித தளர்வும் ஏற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சகல சுகாதார வழிகாட்டல்களும் பின்பற்றப்படுகின்றது என்பதனை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *