இங்கிலாந்தில் தற்போதைய பிளான் பி விதிகள் தொடரும்: பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!

இங்கிலாந்தின் தற்போதைய பிளான் பி விதிகள் இப்போதைக்கு தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதுப்பிப்பில், கொவிட் நடவடிக்கைகள் ஜனவரி 26ஆம் திகதிக்குள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிப்பவர்கள் வேகமாக அதிகரித்து வருவதால் விதிகளை முற்றிலுமாக இரத்து செய்ய முடியாது என அவர் தெரிவித்தார்.

ஓமிக்ரோன் தொற்று தொடர்ந்து பரவலாக பரவி வருகிறது. சில மருத்துவமனைகள் நோயாளிகளை சமாளிக்க சிரமப்படுகின்றன.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, புத்தாண்டு ஈவ் வரையிலான வாரத்தில் பிரித்தானியாவில் 3.7 மில்லியன் மக்கள் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய வாரத்தை விட அதிகம்.

இது இங்கிலாந்தில் 15 பேரில் ஒருவருக்கும், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் 20 பேரில் ஒருவருக்கும், வடக்கு அயர்லாந்தில் 25 பேரில் ஒருவருக்கும் சமம்.

இந்த மதிப்பீடு லண்டனில் மிக அதிகமாக இருந்தது. அங்கு 10 பேரில் ஒருவருக்கு கொவிட் இருப்பதாக நம்பப்படுகிறது.

இது புள்ளி விபரங்களுக்கான திணைக்களத்தின் வாராந்திர தொற்று கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும். இது மக்கள்தொகையின் மாதிரி மூலம் தொற்றுநோயைக் கண்காணிக்கிறது. இது மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களை சேர்க்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *