
கொழும்பு, பிலியந்தலை – போக்குந்தர பிரதேசத்தில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கெசல்வத்த மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.