கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவர் அம்பாறையில் கைது!

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு அம்பாறை நகர்பகுதியில் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கiமைய, அம்பாறை கண்டி வீதியிலுள்ள அம்பாறை நகர்பதியை அண்டிய புத்தங்கல பகுதியில் குறித்த காரை விசேட அதிரடிப்படையின் நிறுத்தி மடக்கிபிடித்தனர்.

இதில் 3 கஜமுத்துக்களை கடத்திவந்த இருவரை கைது செய்ததுடன், கஜமுத்து மற்றும் கார் ஒன்றை மீட்டு அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் களை கட்டுகிறது கரும்பு வெல்லம் தயாரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *